Press "Enter" to skip to content

இலங்கையில் மகப்பேறு சிகிச்சை துறையில் புதிய யுகத்தை உருவாக்கும் “ராயல் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி சென்டர்”

இலங்கையின் மகப்பேறு மற்றும் இனப்பெருக்க சுகாதார துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ராயல் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி சென்டர் தனது கதவுகளை அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளது. இந்தியாவின் சென்னையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புடன் இயங்கும் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி ரிசர்ச் சென்டர் (PFRC) மற்றும் மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நம்பிக்கையைப் பெற்ற ராயல் மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டுச் செயல் மூலம் இந்த மாபெரும் முயற்சி உருவாகியுள்ளது.

பாதி நூற்றாண்டுக்கு நெருக்கமாக, PFRC இலங்கையுடன் ஆழமான உறவை பகிர்ந்து வந்துள்ளது. அதன் நிறுவனர் டாக்டர் கீதா ஹரிப்ரியா அவர்களுக்கு, இலங்கை எப்போதும் இரண்டாம் தாய்நாட்டைப் போல் உணரப்பட்டது. இலங்கை தம்பதிகள் தங்களது பெற்றோர் கனவை நனவாக்க வேண்டும் என்ற அவா காரணமாக, அவர் 2018 ஆம் ஆண்டு கொழும்பில் ப்ரஷாந்த் மருத்துவத் தகவல் மையத்தை ராயல் மருத்துவமனை உடன் இணைந்து தொடங்கினார். இந்த முயற்சி ஆயிரக்கணக்கான இலங்கை தம்பதிகளுக்கு வழிகாட்டுதல், மேம்பட்ட மகப்பேறு சிகிச்சைகள் மற்றும் இலங்கை குடும்பங்களுக்கு ஏற்ற சிறப்பு நன்மைகளை வழங்கியது.

ஆனால், 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோய் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சவால்கள், வெளிநாடுகளில் சிகிச்சை பெறுவது கடினமாக்கின. இதை உணர்ந்த டாக்டர் ஹரிப்ரியா மற்றும் ராயல் மருத்துவமனையின் தலைவர் திரு. தினேஷ் ரணவீரா ஆகியோர், உலகத் தரத்திலான மகப்பேறு சிகிச்சை மையத்தை இலங்கையிலேயே உருவாக்க தீர்மானித்தனர்.

கொழும்பு ராயல் மருத்துவமனை மற்றும் சென்னையின் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி ரிசர்ச் சென்டர் இணைந்த முக்கிய முயற்சி

இந்த இணைந்த முயற்சியின் விளைவாக உருவானது ராயல் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி சென்டர் — இந்தியாவிற்கு வெளியே PFRC நிறுவிய முதல் மையம். இது டாக்டர் ஹரிப்ரியா அவர்களின் இலங்கைக்கான அன்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. இப்போது, இலங்கை தம்பதிகள் தங்களது பெற்றோர் கனவை நனவாக்க, உலகத் தரத்திலான சிகிச்சைகள், மேம்பட்ட இனப்பெருக்க நுட்பங்கள் மற்றும் பரிவோடு கூடிய பராமரிப்பை தங்கள் நாட்டிலேயே பெற முடிகிறது.

“பல நாடுகள் எங்களை மையம் தொடங்க அழைத்தன. ஆனால், இலங்கை எப்போதும் எனது இதயத்துக்குத் தொட்ட நாடாக இருந்தது,” என PFRC நிறுவனரும் மருத்துவ இயக்குநருமான டாக்டர் கீதா ஹரிப்ரியா தெரிவித்தார். “இது எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்புக்கும் நம்பிக்கைக்கும் பதிலளிக்கும் எங்கள் வழியாகும்.”

இப்போது, ஆயிரக்கணக்கான இலங்கை பெண்களுக்கு தாய்மை கனவை தாய்நாட்டிலேயே நனவாக்கும் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

இந்த சிறப்பான நாளில், ராயல் மருத்துவமனை மற்றும் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி ரிசர்ச் சென்டர் ஆகியவை, இந்த ஒத்துழைப்பை வெற்றியாக்கிய அனைவருக்கும் இதயபூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றன.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *